திருச்சி திருவெறும்பூரில் தரைக்கடை தள்ளுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
திருவெறும்பூரில் தரைக்கடை தள்ளுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி திருவெறும்பூரில் இன்று சோசலிச தொழிலாளர் சங்கம் சார்பில் தரைக்கடை,தள்ளுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதரம் காப்பாற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்திற்கு ரகு தலைமை தாங்கினார்.இதில் ஜனநாயக சமூக நல கூட்டமைப்பு சார்பில் சம்சுதீன்,தமிழ் மக்கள் முன்னணி சார்பில் வழக்கறிஞர் கென்னடி ,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணி மாநில செயலாளர் ஆரோக்கியமேரி ,தேசிய தரைக்கடை தள்ளுவண்டி தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் தோழர் மகேஸ்வரன்,அமைப்பு சாரா தொழிலாளர் இயக்கத்தின் தோழர் ஷைனி ,மக்கள் உரிமை மீட்பு இயக்கத்தின் நிறுவனர் தோழர் பஷீர்,சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கமருதீன்ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் அரசினை கண்டித்து கோஷம் எழுப்பப்பட்டன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu