திருச்சி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குமாருக்கு சிறந்த விவசாயிக்கான பரிசு
திருச்சி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி ப.குமார்.
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் ப.குமார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்.பி. ஆக இருந்தவர். இவர் தனது அரசியல் பணிகளுக்கு இடையே விவசாய பணியையும் கவனித்து வருகிறார்.
அந்த வகையில் தஞ்சையை அடுத்த புனல்குளம் கிராமத்தில் கரும்பு பயிரிட்டு ஏக்கருக்கு 70 டன் என 10 ஏக்கரில் 700 டன் கரும்பினை விளைவித்து குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக அரவை பருவத்தில் ஏக்கருக்கு அதிக விளைச்சல் மற்றும் ஆலைக்கு அதிக அளவில் கரும்பு சப்ளை செய்த விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பரிசு வழங்கி வருகிறது .2020 -21 ஆம் ஆண்டுக்கான பரிசு பெறும் விவசாயிகளின் பட்டியலில் முன்னாள் எம்.பி. குமாருக்கு பரிசு வழங்கப்பட இருப்பதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சையை அடுத்த ஈச்சங்கோட்டை உள்ள வேளாண் கல்லூரியில் நடைபெறும் விழாவில் குமாருக்கு இன்று பரிசு வழங்கப்பட இருப்பதாக ஆலை தலைமை நிர்வாகி செல்வ சுரபி தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu