/* */

திருச்சி அருகே எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை

திருச்சி அருகே எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே எலக்ட்ரீசியன் தீக்குளித்து தற்கொலை
X

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 53). இவர் எலக்ட்ரிசியனாக வேலை பார்த்து வந்துள்ளார். மதுபோதையில் வீட்டிற்கு வந்த பிரபாகரன், அவருடைய மகனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்நிலையில் பிரபாகரன் மனைவி லீனா (வயது 50) உள்ளிட்ட குடும்பத்தினர், பிரபாகரனிடம் குடித்து விட்டு வந்து தகராறு செய்வது தொடர்பாக கேட்டபோது, மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பிரபாகரன், தனது உடலில் மண்ணெணய் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார்.

இதில் அவரது உடலில் ஏற்பட்ட 50 சதவீத தீ காயங்களுடன் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Updated On: 9 March 2022 10:00 AM GMT

Related News