/* */

திருச்சியில் போலீஸ்காரரின் மனைவிக்கு கொலை மிரட்டல்

திருச்சியில் போலீஸ்காரின் மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சியில் போலீஸ்காரரின் மனைவிக்கு கொலை மிரட்டல்
X

திருச்சி மேல அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் காத்துவன் என்பவரது செல்போனை காணவில்லை. அவர் தனது செல்போனை போலீஸ்காரரின் சகோதரர்தான் திருடி இருக்கலாம் என்று சந்தேகப்பட்டார்.

சம்பவத்தன்று காத்துவன், தனது நண்பரான அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்த மணிகண்டனுடன் சேர்ந்து போலீஸ்காரரின் சகோதரருடன் தகராறில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ்காரர் மனைவியின் உடையை பிடித்து இழுத்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் அவருக்கு வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் இ.பி.கோ.294 (பி), 323, 506 (2) மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் காத்துவன், மணிகண்டன் மற்றும் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Updated On: 21 Jan 2022 1:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முதுமையின் மூன்றாம் கால்..! அவளுக்கு அவனும்; அவனுக்கு அவளும்..!
  2. வீடியோ
    SavukkuShankar-க்கு ஆதரவாக களம் இறங்கிய எதிர்க்கட்சிகள்...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான...
  4. வீடியோ
    உடைந்த கைகளுடன் நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar !#savukkushankar...
  5. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  6. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  7. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  8. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  10. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!