/* */

மொபட்டுடன் வாய்க்காலில் விழுந்து கல்லூரி காவலாளி பலி

அரியமங்கலம் சாலை அருகே மொபட்டுடன் வாய்க்காலில் விழுந்து கல்லூரி காவலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

மொபட்டுடன் வாய்க்காலில் விழுந்து கல்லூரி காவலாளி பலி
X

பைல் படம்.

திருச்சி அரியமங்கலம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 72). இவர் அரியமங்கலம் எஸ்.ஐ.டி.கல்லூரி விடுதியில் 4 ஆண்டுகளாக காவலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 9 மணி அளவில் எஸ்.ஐ.டி.யில் இருந்து மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அரியமங்கலம் சாலையில் ரீச் அவன்யூ அருகில் உள்ள பாலக்கட்டை அருகே அவர் சென்றபோது மொபட் கட்டுப்பாட்டை இழந்ததால் அங்கிருந்த வாய்க்காலில் விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பழனியாண்டியின் உடலை மீட்டு பிரேத பிரேதபரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 Jan 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...