/* */

திருவெறும்பூர் அருகே வாய்க்காலில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு

திருச்சி திருவெறும்பூர் கட்டளை வாய்க்காலில் குளிக்கும்போது தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுவன் உடல் மீட்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவெறும்பூர் அருகே வாய்க்காலில் மூழ்கிய சிறுவன் உடல் மீட்பு
X
தண்ணீரில் மூழ்கி இறந்த சிறுவன் ஹரீஷ் உடல் மீட்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா காயாம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகன் ஹரிஷ். பதிநான்கு வயது ஹரீஷ் உறவினர் வீட்டிற்கு வந்த இடத்தில் நவல்பட்டு அருகே பழங்கனாங்குடி பகுதியில் உள்ள கட்டளை வாய்க்காலில் குளித்த போது தண்ணீரில் மூழ்கினான்.

அவனது உடலை திருவெறும்பூர் மற்றும் நவல்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் சம்பவ இடத்தில் தாசில்தார் முகாமிட்டு பொதுப்பணித்துறையினர், தீயணைப்புத் துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் பொதுமக்களுடன் இணைந்து தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் 40 அடி ஆழமுள்ள குழுமிக்கு, வாய்க்காலில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் தேடி எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது.

பின்னர் வாய்க்காலில் வரும் தண்ணீரை மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து வரத்து நீரை குறைத்தனர். அதைத்தொடர்ந்து சிறுவன் உடல் இன்று மீட்கப்பட்டு பின்னர் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...