திருச்சி பெல் டவுன்ஷிப் வளாகத்தில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு

திருச்சி பெல் டவுன்ஷிப் வளாகத்தில் தூக்கில் தொங்கிய நபரால் பரபரப்பு

திருச்சி பெல் டவுன்ஷிப்பில் தூக்கில் தொங்கிய நபரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

திருச்சி பெல் டவுன்ஷிப் வளாகத்தில் தூக்கில் தொங்கிய நபரின் உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவெறும்பூர் அருகே உள்ளது பெல் நிறுவன டவுன்ஷிப். இந்த பகுதியில் உள்ள வளாகத்தில் இன்று காலை வாலிபர் ஒருவர் பெல் நிறுவன வெள்ளிவிழா பூங்கா பகுதியில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்குவதாக பாய்லர் ஆலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தூக்கில் தொங்கிய வாலிபரின் உடலை கைப்பற்றி துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார்? இங்கே எதற்கு வந்தார்? எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாரும் இவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்து போனவருக்கு சுமார் 50 வயது இருக்கும். கருப்பு டிசர்ட், கருப்பு கலர் ஜீன்ஸ் பேண்ட், சூமாடல் செப்பல் அணிந்துள்ளார். மேலும் செல்போன் சார்ஜர், ஸ்கோரிங் பிளேடு பை கைப்பற்றப்படுள்ளது.

அவரது செல்போன், பர்ஸ் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. மேலும் சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர் வந்து கைரேகை பதிவு செய்து சென்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story