திருச்சி அருகே சித்த மருத்துவர் உள்பட 3 பேர் மீது தாக்குதல்

திருச்சி அருகே சித்த மருத்துவர் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
திருச்சி அருகே கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சித்த மருத்துவர் உள்பட 3 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்தவர் கனகராஜ் (74). சித்த மருத்துவர். வீட்டின் முன்பக்கத்தில் சித்த மருத்துவமனை நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அய்யாத்துரை (29) என்பவர் கனகராஜ் வீடு அருகே டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 6-ம் தேதி கனகராஜை பார்ப்பதற்காக இவரது பேரன் அரவிந்த் (26) என்பவர் காரில் வந்தார். காரை வீட்டு முன்பு நிறுத்தி விட்டு சென்றார். இதில் காரை நிறுத்துவதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அய்யாத்துரை மற்றும் இவரது நண்பர் அப்துல்லா தெருவை சேர்ந்த ரவுடியான ராகவேந்திரன் (வயது 21) என்பவருடன் சேர்ந்து கனகராஜிடம் தகராறில் ஈடுபட்டனர்.

தகராறு முற்றிய நிலையில் ரவுடி உள்பட 2 பேரும் சேர்ந்து சித்த மருத்துவர் கனகராஜ், இவரது பேரன் மற்றும் உறவினர் தட்சிணாமூர்த்தி ஆகிய 3 பேரை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் காரை அடித்து சேதப்படுத்தினர். இதில் காயமடைந்த 3 பேரும் புறநோயாளியாக சிகிச்சை எடுத்தனர். இதுகுறித்து கனகராஜ் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த அரியமங்கலம் போலீசார் ரவுடி உள்பட 2 பேரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story