திருச்சியில் பதுங்கி இருந்த பிரபல சென்னை ரவுடி உட்பட 3 பேர் கைது

திருச்சியில் பதுங்கி இருந்த பிரபல சென்னை ரவுடி உட்பட 3 பேர் கைது
X

எண்ணூர் தனசேகரன்.

திருச்சியில் பதுங்கி இருந்த பிரபல சென்னை ரவுடியுடன் 2 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, எண்ணூர், அத்திப்பட்டு மேம்பாலம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, பெரம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 40) என்பவர் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் அளித்த தகவலின் பேரில் திருச்சி திருவெறும்பூர் கோகுல் நகரில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன் (வயது 40), அவரது கூட்டாளிகள் சசிகுமார் (வயது 24), மதிவாணன் (வயது 26) ஆகியோரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

மேலும் தலைமறைவாக உள்ள தனசேகரனின் கூட்டாளிகள் அம்பத், கட்டை ரவி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். பிரபல ரவுடியான எண்ணூர் தனசேகரன் மீது 7 கொலை உள்ளிட்ட 40 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story