/* */

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் திருக்குறள் கரும்பலகை வைக்கவேண்டும் -ஜனநாயக ஜனதாதளம் கோரிக்கை

தமிழக அரசு சார்ந்த அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் தினம் ஒரு குறள் கரும்பலகை வைத்திட வேண்டும் என்று ஜனநாயக ஜனதாதளம் வலியுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில்  திருக்குறள் கரும்பலகை வைக்கவேண்டும் -ஜனநாயக ஜனதாதளம் கோரிக்கை
X

தமிழக அரசு சார்ந்த அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் தினம் ஒரு குறள் கரும்பலகை வைத்திட வேண்டும் என்று ஜனநாயக ஜனதாதளம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜனநாயக ஜனதா தளம் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் ராபர்ட் கிறிஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இந்த வகையில் தமிழ் தெய்வீக புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் நூலை தேசிய நூலக அறிவிக்க பிரதமரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதன் மூலம் அவருக்கு திருக்குறள் மீது இருக்கும் பாசத்தையும், விருப்பத்தையும் நாடறிய செய்துள்ளது.

தமிழ்நாட்டின் திருக்குறள் நூலின் குறளும் உலக பொதுமறையான நீதியை உணர்த்திடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு சார்ந்த அனைத்து அலுவலகம், பள்ளி, கல்லூரிகளில் தினம் ஒரு குறள் விளக்கும் கரும்பலகையை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இது குறித்த சுற்றறிக்கையை அரசு அலுவலங்கங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி செயல்படுத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் ராபர்ட் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.

Updated On: 26 Jun 2021 4:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  3. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  5. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  6. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  7. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  8. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  10. லைஃப்ஸ்டைல்
    முகப்பொலிவின் மந்திரம் - சாலிசிலிக் ஆசிட்!