/* */

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி

திருச்சி கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் இருசக்கர வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

HIGHLIGHTS

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் பலி
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்டம் கிரீன் லைன்ஸ் ரெட்டில்ஸ் கட்டபொம்மன் சாலையைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சதீஷ் (22). அதேபோல் சென்னை முத்தமிழ் நகரைச் சேர்ந்த 22 வயதான கிருஷ்ணன். இவர்கள் இருவரும் சென்னையில் இருந்து கொடைக்கானல் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.சதீஷ் என்பவர் வாகனத்தை ஓட்டி வந்துள்ளார். கிருஷ்ணராமன் பின்னால் உட்கார்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் நம்பர் 1 டோல்கேட் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் பாலத்திற்கு முன் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் பின்னால் அமர்ந்திருந்த கிருஷ்ணன் மீது மற்றொரு அடையாளம் தெரியாத வாகனம் தலையில் ஏறி நிற்காமல் சென்றதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்த கொள்ளிடம் போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். வாகனத்தை ஓட்டிவந்த சதீஷ்க்கு கை,கால்களில் படுகாயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். விபத்து சம்பவம் குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Updated On: 16 Aug 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு