/* */

திருச்சி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் உயிரிழப்பு

திருச்சி அருகே கோப்பு கிராமத்தில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் மின்சாரம் தாக்கி பலியானார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த பெண் உயிரிழப்பு
X

திருச்சி அருகே மின்சாரம் தாக்கி இறந்த வசந்தா.

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள கோப்பு கீழத்தெருவை சேர்ந்தவர் வசந்தா (வயது 65). இவரின் கணவர்பழனிவேல் இறந்து விட்டார்.வாழைப்பழ வியாபாரம் செய்து வரும் வசந்தாவிற்கு 4 மகள்கள், 3மகன்கள் உள்ளனர். இந்நிலையில்இன்று காலை இயற்கை உபாதைக்காக அவர் வீட்டில் இருந்து எழுந்து வெளியே சென்றுள்ளார்.அப்போது பஞ்சாயத்து தெருவிளக்குகள் எரிய வில்லை.

இதனால் இருட்டில் சென்ற அவரால் அங்கு அறுந்து கிடந்த மின்சார கம்பியை கவனிக்கமுடியவில்லை. இதன் காரணமாக அவர் மின்சார கம்பியை மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீசார் வசந்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். இதுபற்றி ஒரு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 10 Nov 2021 10:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  3. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. வீடியோ
    மேடையிலேயே Cool Suresh செய்த சேட்டை அதிர்ச்சியில் உறைந்த நடிகைகள்...
  6. வீடியோ
    🔴LIVE :இளைஞர்களின் உணர்வுகளையும்,தியாகத்தையும் சீமான் வியாபாரம்...
  7. வீடியோ
    கதாநாயகி இல்லாத குறையை தீர்த்த Cool Suresh ! #coolsuresh...
  8. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  9. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  10. ஈரோடு
    புஞ்சை புளியம்பட்டி அருகே அரசு பேருந்தின் மீது கல்வீசி கண்ணாடியை...