Begin typing your search above and press return to search.
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி திருவிழாவில் இன்று இராப்பத்து ஆறாம் நாள்
ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி விழாவில் இன்று ராப்பத்து ஆறாம் நாளையொட்டி நம்பெருமாள் சௌரி ராஜ முடி அலங்காரத்தில் எழுந்தருளிளார்.
HIGHLIGHTS
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இன்று வைகுந்த ஏகாதசி விழாவின் ஆறாம் நாளாகும்.இதனை யொட்டி இன்று ஸ்ரீ நம்பெருமாள் சௌரி-ராஜ முடியில் புஜகீர்த்தியும், நகரியும், நடுவில் பெரிய பிராட்டியார் பதக்கமும், திருமார்பில் விமான பதக்கமும், ரத்தின அபய ஹஸ்தமும் நெல்லிக்காய் மாலை, காசு மாலை, 8 வட முத்து சரம், தங்க பூண் பவழ மாலை, அடுக்கு பதக்கங்கள், பின் சேவையாக அண்டபேரண்ட பக்ஷி பதக்கமும் சாற்றி ஆயிரம் கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.