/* */

திருச்சி முக்கொம்பு அணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம்

திருச்சி முக்கொம்பு மேலணையில் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

திருச்சி முக்கொம்பு அணையில்  பராமரிப்பு பணிகள்  தீவிரம்
X

திருச்சி முக்கொம்பு மேலணையில்  தீவிரமாக நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள்

காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து வருடந்தோறும் ஜீன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கரூர் மாவட்டத்தில், மாயனூர் கதவணை, திருச்சி மாவட்டத்தில் முக்கொம்பு தடுப்பணை ஆகியவற்றின் வழியாக, கல்லணைக்கு வருகிறது. அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு, கல்லணை கால்வாய், வெண்ணாறு, கொள்ளிடம் ஆறு போன்றவற்றில் தண்ணீர் திறக்கப்படும்.

இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். அணையில் திறக்கப்படும் தண்ணீர், மாயனுர், முக்கொம்பு அணைகள் வழியாக, 16ம் தேதி, கல்லணையை சென்றடையும்.

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் கல்லணையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வண்ணம் பூசும் பணிகள் முடிந்துள்ளது.

ஆனால், காவிரி ஆற்றில் வரும் 25 ஆயிரம் கனஅடி தண்ணீரை கல்லணைக்கு பிரித்துக் கொடுக்கும் முக்கொம்பு அணையில், ஷட்டர்கள் பராமரிப்பு பணி மேற்பட்ட நிலையில் வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பை பொருத்தவரை, கல்லணை தான் பிரதானமாக கருதப்படுகிறது.

Updated On: 9 Jun 2021 6:34 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  3. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  5. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!