Begin typing your search above and press return to search.
திருச்சி: 87 பேர் கொரோனா பாதிப்பில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்றுவந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்த 67 நபர்களும் ,கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு நபர் ஆக மொத்தம் 71 நபர்கள் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதே போல சேதுராப்பட்டி அரசுபொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவ முகாமில் 16 நபர்கள் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆக மொத்தம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 71 நபர்களும் தனிமைப்படுத்தப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 16 நபர்களும் மொத்தம் 87 நபர்கள் பூரண குணமாக்கி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.