Begin typing your search above and press return to search.
வீட்டில் ஆள் இல்லாத போது உள்ளே சென்று 5 சவரன் நகை, செல்போன் திருட்டு
திருவானைக்காவலில் வீட்டில் ஆள் இல்லாத போது உள்ளே சென்று 5 சவரன் நகை, செல்போனை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS
திருச்சி திருவானைக்காவல் கந்தன் நகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 51). இவர் வீட்டில் யாரும் இல்லாத போது பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் வீட்டில் இருந்த 5 சவரன் தங்க நகை மற்றும் செல்போனை திருடி சென்று விட்டனர்.
இது குறித்து ராமகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இந்திராகாந்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.