/* */

திருச்சி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் தீ குளித்து தற்கொலை

திருச்சி அருகே குடும்ப தகராறில் கைக்குழந்தையுடன் இளம்பெண் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

HIGHLIGHTS

திருச்சி அருகே கைக்குழந்தையுடன் இளம்பெண் தீ குளித்து தற்கொலை
X

கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பிரியா.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சந்துரு. இவர் சத்திரப்பட்டி ரேஷன் கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு பிரியா என்ற மனைவியும், இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் இருந்தனர். இந்த நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி சண்டை இட்டு வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல இன்றும் சண்டை நடந்துள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த பிரியா தனது உடம்பில் அடுப்பு எரிய ஊற்றப்படும் எண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். மேலும் அருகில்இருந்த குழந்தையை கட்டியணைத்து இருக்கிறார். இதில் சம்பவஇடத்திலேயே பிரியாவும், அவரது இரண்டரை வயது குழந்தையும் உயிரிழந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ராம்ஜிநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலை செய்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 Dec 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க