/* */

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடக்கம்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நாளை தொடங்குகிறது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்  ஊஞ்சல் உற்சவம் நாளை தொடக்கம்
X

பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் வரும் 18-ம் தேதி துவங்கி 26-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் யாகசாலையிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்துக்கு எதிரில் உள்ள நாலுகால் மண்டபத்தில் திருவந்திக்காப்பு கண்டருளிய பின் ஊஞ்சல் மண்டபத்துக்கு 5. 30-மணிக்கு வந்து சேருகிறார். இரவு 7. 15-மணிக்கு நம்பெருமாள் ஊஞ்சலில் எழுந்தருளிய பின் மங்களாரத்தி கண்டருளுகிறார்.பின்னர் நம்பெருமாள் ஊஞ்சல் மண்டபத்திலிருந்து இரவு 9-மணிக்கு புறப்பட்டு 9.15- மணிக்கு யாகசாலைக்கு சென்றடைகிறார்.

விழாவின் 2-ம் நாள் முதல் 6-ம் நாள் வரை மற்றும் 8-ம் நாள் ஆகிய 6 நாட்களும் தினமும் நம்பெருமாள் யாகசாலையிலிருந்து மாலை 5. 30-மணிக்கு புறப்பட்டு 6-மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்து சேர்கிறார். பின்னர் ஊஞ்சல் உற்சவம் இரவு 7. 15-மணிக்கு துவங்கி 8-மணி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான 7-ஆம் நாள் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் மூலஸ்தானத்திலிருந்து மாலை 6-மணிக்கு புறப்பட்டு கொட்டாரவாசலில் நெல்லளவு கண்டருளிய பின்னர் இரவு 7-மணிக்கு தாயார் சன்னதியில் திருவந்திக்காப்பு நடைபெறும். இரவு 7. 30 மணி முதல் 8. 15 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நிறைவு நாளான 9-ஆம் நாள் 26-ஆம் தேதி நம்பெருமாள் சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி நடைபெறும்.

Updated On: 17 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...
  4. திருவள்ளூர்
    திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் தீ தடுப்பு ஒத்திகை விழிப்புணர்வு...
  5. இந்தியா
    நடிகை ராஷ்மிகா பாராட்டு! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
  6. உலகம்
    59 ஆண்டு கால 'லீ' அரசியல் சகாப்தம் முடிவுக்கு வந்தது எப்படி?
  7. திருவள்ளூர்
    ஆசிரியர்கள் - முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி!
  8. ஈரோடு
    சத்தி அருகே ஆம்னி வேனில் கடத்திய 16 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
  9. பூந்தமல்லி
    கூவம் ஆற்றின் அருகே வீடுகளை அப்புறப்படுத்த நோட்டீஸ்: மக்கள் சாலை...
  10. இந்தியா
    கேதார்நாத் கோயில் நடை திறப்பு!