/* */

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி உற்சவம் 2-ம் நாள் சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம். இன்று இரண்டாம் நாள் சேவை நடைபெற்றது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நவராத்திரி உற்சவம் 2-ம் நாள் சேவை
X

ஸ்ரீரங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி கொலு மண்டபத்திற்கு சென்றார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கி வரும் 14-ந் தேதி வரை 9 நாட்கள் நடைபெறுகிறது. இதில் தாயார் திருவடி சேவை வரும் 12-ந் தேதி நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான நேற்று பகல் 1.30 மணிமுதல் மாலை 3.30 மணிவரை மூலஸ்தானத்தில் ரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளுளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ரெங்கநாச்சியார் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். பின்னர் இரவு 7.45 மணிக்கு ஆரம்பித்து 8.45 மணி வரை கொலு நடைபெற்றது. இரவு 9.45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.


2-ம் திருநாளான இன்று 7-ந்தேதி முதல் 6-ஆம் திருநாளான 11-ந் தேதி வரை மற்றும் 8-ஆம் திருநாளான 13-ந்தேதியும் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு கொலு மண்டபத்திற்கு மாலை 6 மணிக்கு வந்து சேருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் திருநாளான 12–ந் தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது.

விழாவின் 9-ஆம் நாளான 14-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் நவராத்திரி உற்சவ விழா நிறைவடைகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Updated On: 7 Oct 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    5 நிமிடங்களில் 6,000 அடி இறங்கிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம்: ...
  2. கோவை மாநகர்
    கோவையில் தொடர் கனமழை ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  3. சூலூர்
    சூலூர் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல் ; விற்பனைக்கு வைத்திருந்த நபர்...
  4. இந்தியா
    போர்ஷே விபத்தில் சிக்கிய சிறுவனின் தந்தை தப்பிக்க பலே திட்டம்....
  5. ஆன்மீகம்
    பேனா கூட கல்விக்கான ஆயுதம்தான்..! கருவிகளை போற்றுவோம்..!
  6. இந்தியா
    பாஜகவுக்கு 300 இடங்கள் கிடைக்கும்: பிரசாந்த் கிஷோர் கணிப்பு
  7. காஞ்சிபுரம்
    உத்திரமேரூர் அருகே கிணற்றை காணவில்லை என கிராம மக்கள் ஒட்டிய போஸ்டர்
  8. வீடியோ
    🔥Soori போல் Mimicry செய்து பங்கமாய் கலாய்த்த SK | Sivakarthikeyan |...
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை: ஒரே நாளில் 624.50 மி.மீ
  10. காஞ்சிபுரம்
    அயோத்தி செல்லும் வில் மற்றும் அம்புவிற்கு காஞ்சிபுரத்தில் சிறப்பு...