Begin typing your search above and press return to search.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஒப்பந்த பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண தொகுப்பு
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஓப்பந்த பணியாளர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டது.
HIGHLIGHTS
ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் கொரானா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு பிறக்பிக்கப்பட்டு சுமார் 1 மாத காலமாக வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்படாத காரணத்தினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.
கோயிலில் பணிபுரியும் ஓப்பந்த பணியாளர்களுக்கு சென்னையை சேர்ந்த ஜோதி என்ற உபயதாரர் 300 ஒப்பந்த பணியாளர்களுக்கு தலா 1 கிலோ வீதம் சர்க்கரை , உப்பு , ரவை, கோதுமைமாவு , துவரம் பருப்பு அடங்கிய தொகுப்பினை அனுப்பிவைத்தார் ,
அதை இன்று கோயில் ரெங்க விலாஸ் மண்டபத்தில் இணை ஆணையர் மாரிமுத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வழங்கினார் , முன்னதாக ரங்கா ரங்கா வாயிலில் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை சரி பார்க்க பட்டு , கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்து , முக கவசம் அணிந்து , சமூக இடைவெளியுடன் அனுமதிக்கப்பட்டனர்.