/* */

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு யானை மீது தங்க குடத்தில் காவிரி புனித நீர்

துலா மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு காவிரியில் இருந்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு யானை மீது தங்க குடத்தில் காவிரி புனித நீர்
X
துலா மாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு காவிரியில் இருந்து யானை மீது வைத்து தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது.

ஐப்பசி மாதத்தில் சூரியன், துலா ராசியில் சஞ்சரிப்பதால் இந்த மாதம் துலா மாதம் என்றழைக்கப்படுகிறது. இந்த மாதத்தில் காவிரி ஆறு புனிதமாகிறது என்பது ஐதீகம். இதனால் ஐப்பசி மாதத்தில் காவிரி ஆற்றில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி நற்பலன்கள் அடையலாம் என்பதும் நம்பிக்கையாகும்.

இதையொட்டி காவிரி ஆற்றில் ஐப்பசி மாதம் முழுவதும் பக்தர்கள் நீராடுவர். இன்று 17-ம் தேதி துலாமாத பிறப்பையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து தங்கக் குடத்தில் புனிதநீர் யானை மீது வைத்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு காலை 10 மணிக்கு சந்தனு மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளினார். ஐப்பசி மாதம் முழுவதும் ஸ்ரீரங்கம் கோயிலில் பூஜைக்கு காவிரி ஆற்றின் அம்மா மண்டபம் படித்துறையிலிருந்து தினமும் காலை தங்க குடத்தில் புனிதநீர் எடுத்து செல்லப்படுகிறது. மற்ற மாதங்களில் கொள்ளிடம் ஆற்றில் இருந்து தான் கோயிலுக்கு புனிதநீர் கொண்டு செல்லப்படுகிறது. ஆண்டுதோறும் துலா மாதம் (ஐப்பசி) முழுவதும் மூலவர் பெரிய பெருமாள் தங்க ஆபரணங்கள் மற்றும் சாளக்கிராம மாலை அணிந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.

இந்தாண்டு தற்போது மூலவருக்கு தைலக்காப்பு போடப்பட்டு இருப்பதால் தைலக்காப்பு உலர்ந்தபின் தீபாவளி தினத்துக்கு முன்பு மூலவருக்கு தைலக்காப்பு அகற்றப்பட்டு தங்க ஆபரணங்கங்களும், சாளக்கிராம மாலைகளும் அணிவிக்கப்படவுள்ளது. அன்று முதல் மூலவர் திருவடி சேவையையும் தரிசிக்கலாம்.


Updated On: 17 Oct 2021 7:45 AM GMT

Related News