ஸ்ரீரங்கம்: ரூ.48 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய எம்.எல்.ஏ.

ஸ்ரீரங்கம்: ரூ.48 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கிய  எம்.எல்.ஏ.
X

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி ஒரு பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.

ஸ்ரீரங்கம் தொகுதியில், ரூ.48 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. பழனியாண்டி வழங்கினார்.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குழுமணி, எட்டரை திருப்பராய்த்துறை, பெட்டவாய்த்தலை, எட்டுமாத்திடல், திருவளர்ச்சோலை போசம்பட்டி உள்ளிட்ட கூட்டுறவு சங்கங்களின் சார்பாக கூட்டுறவு வார விழா மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி போசம்பட்டி திருமுருகன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு திருச்சி சரக துணை பதிவாளர் சாய் நந்தினி முன்னிலை வகித்தார். ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி தலைமை தாங்கினார். களப்பணி அதிகாரி விமலா வரவேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பால் கறவை கடன், பெட்டிகடை, மகளிர் சுய உதவிகுழு கடன், மாற்று திறனாளிகளுக்கான கடன் உள்ளிட்ட பலவகையான 63 பயனாளிகளுக்கு ரூ.48 லட்சத்தில் நலதிட்ட உதவிகளை ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ, பழனியாண்டி வழங்கினார். நிகழ்ச்சியில் போசம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், மாவட்ட கவுன்சிலர் பாக்கியலட்சுமி கணேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story