திருச்சி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் நிலம் அபகரிப்பு

திருச்சி அருகே ரூ.1 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் நிலம் அபகரிப்பு
திருச்சி அருகே சோமரசம்பேட்டையில் ரூ.1 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு செய்யப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

திருச்சி சோமரசம்பேட்டையை சேர்ந்த அண்ணாதுரை மகன் சசிகுமார். இவர், திருச்சி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு மற்றும் மீட்பு சிறப்பு பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில், அதவத்தூர் கிழக்கில் (சாந்தாபுரம்) உள்ள எங்களது தந்தைக்கு சொந்தமான ரூ.1 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் நிலத்தை, உறையூரை சேர்ந்த ஞானசேகரன், அவரது மனைவி நளினி ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து அபகரித்துள்ளனர்.

இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எங்களது நிலத்தை மீட்டு தர வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் தொடர்பாக இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து ஞானசேகரன் மற்றும் அவரது மனைவி நளினி ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story