/* */

திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த மெக்கானிக்கிற்கு போலீஸ் வலைவீச்சு

திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த மெக்கானிக்கை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

HIGHLIGHTS

திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த மெக்கானிக்கிற்கு போலீஸ் வலைவீச்சு
X

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள மேக்குடி கிராமத்தை சேர்ந்தவர் குமார் என்கிற பெரியசாமி. இரு சக்கர வாகன மெக்கானிக்கான இவர், அதே பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலித்து வந்ததாகவும், பின்னர் அவருடைய வீட்டிற்கு தெரியாமல் கடந்த மாதம் ஆர்.டி.மலை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் அதிகாரிகளுக்கு தெரிய வரவே, அவர்களது ஆலோ சனையின்பேரில் மணிகண்டம் ஊர்நல அதிகாரி சுந்தரி, ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார், பெரியசாமி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது வழக்கு பதிவு செய்த தகவலறிந்த பெரியசாமி தப்பி ஓடி, தலைமறைவானார். போலீசார் அவரை தேடி வருகின்றனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்ததாக பெரியசாமியின் பெற்றோர் கனகராஜ், லெட்சுமி ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 28 Feb 2022 4:46 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு