/* */

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி பிளஸ்-2 மாணவன் உயிரிழப்பு
X
திருச்சி முக்கொம்பு காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நவீன்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மண்பாறை சந்தனபட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் நவீன் (வயது 17). இவர் அந்த பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் +2 படித்து வந்துள்ளார். நேற்று காலை பள்ளிக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து நண்பர்கள் 5 பேருடன் முக்கொம்பு சுற்றுலா மையத்திற்கு சென்றுள்ளார்.

காவிரி ஆற்றில் குளிக்க ஆசைப்பட்ட நவீன் நண்பர்களோடு காவிரியில் இறங்கி குளித்தார்.அப்போது மேலணையில் 2 வது மதகு பகுதியில் குளித்து கொண்டிருந்த போது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியதாதல் நவீன் மட்டும் தண்ணீரில் மூழ்கினார். அப்போது அவருடன் குளித்து கொண்டிருந்தவர்கள் சத்தம் போடவே அருகில் இருந்தவர்கள் ஒடிசென்று காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் தண்ணீரில் ஆழமான பகுதியில் சென்றதால் காப்பாற்ற முடியாமல் போனது. பின்னர் திருச்சி தீயணைப்பு வீர்ர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் பொது மக்கள் உதவியுடன் தண்ணீரில் மூழ்கியவரின் உடலை மீட்டனர்.

பின்னர் இறந்த மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து புகாரின் பேரில் ஜீயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 28 Sep 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது