/* */

திருச்சி அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது போலீஸ் வழக்குப் பதிவு

கிராம சபை கூட்டத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக திருச்சி அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மீது  போலீஸ் வழக்குப் பதிவு
X

ஜீயபுரம் அருகே உள்ள அல்லூரில் கடந்த 2-ந்தேதியன்று சிவன் கோவில் வளாகத்தில் ஊராட்சிமன்றத்தின் சார்பாக கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

அந்த கிராம சபை கூட்டத்தில் அல்லூர் மேலபச்சேரியை சேர்ந்த ஆனந்த் என்பவர் கேள்வி கேட்கும் போது, ஊராட்சி மன்ற தலைவர் உனக்கு ஏன் பதில் கூற வேண்டும்?உனக்கு கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கு? என்றும், மேலும் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த 10-ந்தேதி தனது மனைவியுடன் காரில் செல்லும் போது காரை வழி மறித்து சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஆனந்த் என்பவர் ஜீயபுரம் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் விஜயேந்திரன் (வயது 49),அல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரபாகரன், மணிகண்டன், பாரத், விக்ரம்(எ) வீரப்பன் ஆகியோர் மீது ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) சுப்பையா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Updated On: 18 Oct 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்