/* */

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ.70 லட்சம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் பக்தர்களின் காணிக்கை ரூ.70 லட்சம் இருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியல் திறப்பு: பக்தர்களின் காணிக்கை ரூ.70 லட்சம்
X

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் உண்டியல்கள் இன்று திறந்து எண்ணப்பட்டது.

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்க நாதர் கோவில். உலகின் மிக உயரமான ராஜகோபுரம் மற்றும் கோவில் வளாகத்தில் 21 உப கோபுரங்களுடன் 157 ஏக்கர் பரப்பளவில் உள்ளது ஸ்ரீரங்கம் கோவில். காவிரி கொள்ளிடம் ஆகிய இரு நதிகளுக்கு இடையில் அமைந்திருப்பதால் இதனை ஸ்ரீரங்கம் தீவு என்றும் கூறுவார்கள்.

ஸ்ரீரங்கம் ரங்க நாதர் கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிர கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். சமீபத்தில் இக்கோவிலில் தேரோட்டம் மற்றும் சித்திரை திருவிழாக்கள் நடந்து முடிந்துள்ளன.

இந்நிலையில் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் இன்று 24.04.2024 மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் காணக்கிடப்பட்டது. இதில் ரூபாய் 70,03,170/- , தங்கம் 155 கிராம் , வெள்ளி 775 கிராம், மற்றும் வெளிநாட்டு ரூபாய் தாள்கள் 280 எண்ணிக்கைகள் கிடைக்கப்பெற்றன.

இந்த தகவல் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 24 April 2024 8:46 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...