/* */

திருச்சி ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதித்தவர் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு

திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மனநிலை பாதிப்பால் சாலைகளில சுற்றிதிரிந்தவர் மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்,

HIGHLIGHTS

திருச்சி ஸ்ரீரங்கத்தில்  மனநிலை பாதித்தவர் கருணை இல்லத்தில் ஒப்படைப்பு
X
திருச்சி ஸ்ரீரங்கத்தில் மன நலம் பாதிக்கப்பட்டவர் மீட்கப்பட்டு கருணை இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் (வயது 35) பல மாதங்களாக மனநிலை பாதித்த காரணத்தால் குடும்ப உறவினர்களால் புறக்கணிக்கப் பட்டு சாலையோரங்களில் யாசகம் பெற்று சுற்றித்திரிந்து வந்தார்.

பராமரிப்பின்றி இருந்த நிலையில் சுந்தரபாண்டியை 14-ந்தேதியான இன்று ஸ்ரீ வருத்தாஸ்ரம மீட்பு குழுவால் மீட்கப்பட்டு சிகை அலங்காரம் மற்றும் உடல் சுத்தம் செய்து புத்தாடை அணிவித்து, பின் முறையாக ஸ்ரீரங்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் அதற்கான மனு ரசீது பெற்று மேற்படி சுந்தரபாண்டி என்பவருக்கு மறுவாழ்வு கொடுக்கும் வகையில், சமயபுரம் அருகில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற வேலா என்ற கருணை இல்லத்தில் முறையாக ஒப்படைக்கப் பட்டார்.

இந்த மீட்பு பணிக்கு பெரிதும் உதவி புரிந்த திருச்சி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக பிசியோதெரபிஸ்ட் ரமேஷ்,ஸ்ரீரங்கம் காவல் நிலைய அனைத்து காவலர்களுக்கும் ஸ்ரீ வருத்தாஸ்ரம் முதியோர் இல்லம் & மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் சார்பாக நன்றியை தெரிவித்தனர்.

Updated On: 14 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....