/* */

திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம்

திருச்சி அருகே உள்ள அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன் காப்போம் மருத்துவமுகாம்
X

திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் வருமுன்காப்போம் மருத்துவ முகாம் நடந்தது.

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் முள்ளிக்கரும்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரதுறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு முள்ளிக்கரும்பூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா துரைராஜ் தலைமை தாங்கினார். அந்தநல்லூர் ஒன்றிய குழு தலைவர் துரைராஜ் முன்னிலை வகித்தார் . வட்டார தலைமை மருத்துவ அதிகாரி விக்னேஸ்வரன் வரவேற்றார்.

இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், சிறுநீர் பரிசோதனை, ஸ்கேன், இ.சி.ஜி, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு அரசு மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். சித்த மருத்துவம் தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தின் மூலமும் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக குழுமணி ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் சண்முகவடிவு, மாவட்ட கவுன்சிலர் பாக்கியலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 261 பயனாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. முடிவில் கிராம சுகாதார செவிலியர் தனசீலி நன்றி கூறினார்.

Updated On: 11 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.