/* */

ஸ்ரீரங்கத்தில் மனைவி மீது சந்தேகத்தால் தற்கொலை செய்து கொண்ட கணவன்

ஸ்ரீரங்கத்தில் மனைவி மீது சந்தேகப்பட்டு கொடுமை செய்த கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கத்தில் மனைவி மீது சந்தேகத்தால் தற்கொலை செய்து கொண்ட கணவன்
X

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் கீரைகல்மேடு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் குடிப்பழக்கம் உள்ள இவர். தனது மனைவி வனிதா மீது சந்தேகம் கொண்டதால் அடிக்கடி துன்புறுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் வனிதா தனது பாட்டி வீட்டிற்கு சென்ற உள்ள நிலையில் ரவிச்சந்திரன் அரளி விதையை அரைத்துக் குடித்துள்ளார்.சிகிச்சைக்காக அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 24 April 2021 1:45 PM GMT

Related News