திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த  தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

ஜீயபுரம் போலீஸ் நிலையம் (பைல் படம்)

திருச்சி அருகே சிறுமியை திருமணம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு பகுதி கள்ளமேட்டை சேர்ந்தவர் விவேக் (வயது 26). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த சம்பவம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரியவரவே இது தொடர்பாக சமூக நலதுறையை சேர்ந்த கவுரி என்பவர் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விிசாரணை செய்து, விவேக் என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story