திருச்சியில் தீயில் கருகிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சியில் தீயில் கருகிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திருச்சியில் சேலையில் தீ பட்டு தீயில் கருகிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னை பி.வி. சண்முகம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மனைவி பத்மாவதி (வயது 72 ). இவர் ஸ்ரீரங்கத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்து வந்தார். சம்பவத்தன்று வீட்டு பூஜை அறையில் உள்ள விளக்கு இவரது சேலையில் பட்டு தீப்பிடித்தது .இதில் தீக்காயமடைந்த பத்மாவதியை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story