/* */

ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் மாற்றம்

ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

ஸ்ரீரங்கம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் நீர்வழித்தடம் மாற்றம்
X

நீர்வழித்தடம் மாற்றம் செய்யப்படும் காட்சி.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோயில் திருவாராதனத்திற்கு தினமும் கொள்ளிடம் ஆற்றிலிருந்துதான் தீர்த்தம் கொண்டுவரப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு கொள்ளிடத்தில் குறைந்த அளவு தண்ணீரே ஆற்றின் நடுப்பகுதியில் ஒடுகிறது. இதனால் தினமும் ரெங்கநாதர் கோவில் பணியாளர்கள் ஆற்று மணலில் சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு நடந்து சென்று தீர்த்தம் சேகரிக்க வேண்டிய நிலை இருந்தது. மேலும் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க செல்லும் பொதுமக்களும் சிரமப்பட்டனர்.

இதையடுத்து நடு ஆற்றில் ஓடும் நீரின் ஒரு பகுதியை ஸ்ரீரங்கம் தெற்கு பகுதிக்கு திருப்பி விட்டால், கோவில் பணியாளர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் பயன் பெறுவார்கள் என கோரிக்கை விடப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொக்கலின் இயந்திரம் மூலம் கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு தற்காலிக கால்வாய் அமைக்கப்பட்டு வடக்கு வாசல் கொள்ளிடக்கரை அருகில் நீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Updated On: 11 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?