/* */

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்து பற்றி போலீசார் விசாரணை. நடத்தி வருகிறார்கள்.

HIGHLIGHTS

திருச்சி அருகே பெட்டவாய்த்தலையில் கடையின் பூட்டை உடைத்து கொள்ளை
X

பெட்டவாய்த்தலையில் கொள்ளை நடந்த மளிகை கடை

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவேரி நகரில் மூக்கன் என்பவருக்கு சொந்தமான மளிகை கடை உள்ளது. நேற்று இரவு வழக்கம் போலகடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை மூக்கன் திரும்பி வந்து கடையை திறக்க பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் கடையின் உள்ளே சென்று பார்த்தனர். பின்னர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடையில் விற்பனை செய்து வைக்கப்பட்டிருந்த ரூ15 ஆயிரம் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இந்த கொள்ளையில் துப்பு துலக்க போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

மோப்ப நாய் அங்கிருந்த மில் கேட் வரை ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்க வில்லை. இதுகுறித்து பெட்டவாய்த்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 29 Sep 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. உலகம்
    ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்
  4. தேனி
    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை! அணைகளுக்கு நீர் வரத்து தொடக்கம்
  5. தென்காசி
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. திருப்பரங்குன்றம்
    திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் அதிகரிக்கும் திருமணக் கூட்டம்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருமங்கலம்
    வாடிப்பட்டியில், மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி!
  9. தேனி
    நீர்நிலைகளின் பாதுகாப்பு : இந்து எழுச்சி முன்னணி வலியுறுத்தல்..!
  10. க்ரைம்
    கணவரை கொன்று உடலை எரித்த மனைவி..!