/* */

திருச்சி மணிகண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருச்சி மணிகண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் நகை. ரூ.60 ஆயிரம் பணம் திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

திருச்சி மணிகண்டம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
X

திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள கண்தீனதயாள் நகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 29). இவரது மனைவி பார்வதி (வயது 28). இந்த தம்பதிகள் சரக்கு ஆட்டோவில் ஊர், ஊராக சென்று காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் கோவிந்தராஜ் வீட்டை பூட்டிவிட்டு மனைவி, குழந்தைகளுடன் காய்கறி வியாபாரத்துக்கு சென்றுவிட்டார்.

பின்னர் இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவிந்தராஜ் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, உள்ளே பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.60 ஆயிரம் திருட்டு போயிருந்தது. மேலும் அங்கு அறையில் வைத்திருந்த ஒரு பித்தளை அண்டா, ஒரு பித்தளை சர்வம், 2 குத்து விளக்குகள் ஆகியவையும் திருட்டு போயிருந்தது.

வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு இந்த துணிகர திருட்டு நடைபெற்றுள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 1 Dec 2021 4:19 AM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  4. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  5. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  6. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  10. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!