/* */

திருச்சி மணிகண்டம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி

மணிகண்டம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி

HIGHLIGHTS

திருச்சி மணிகண்டம் அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சி
X

திருச்சி மாவட்டம், மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலத்தில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. நேற்று முன்தினம் விற்பனை நேரம் முடிந்ததும் கடையை பூட்டி விட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் துப்புரவு பணியாளர் வந்துள்ளார். அப்போது டாஸ்மாக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடையின் ஷட்டர் சற்று தூக்கிய நிலையில் இருந்தது. இதனையடுத்து அவர் டாஸ்மாக் மேற்பார்வையாளர் ராமச்சந்திரமூர்த்திக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்குவந்த அவர் மணிகண்டம் போலீசில் புகார் கொடுத்தார்.

இதனையடுத்து சப்-இன்ஸ் பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு வைக்கப்பட் டிருந்த மது பாட்டில்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் அப்படியே இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறு கையில், டாஸ்மாக் கடையின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து திருட முயன்றபோது அங்கு ஆள் நடமாட்டம் இருந்துள்ளதால் அவர்கள் திருட்டு முயற்சியைக் கைவிட்டு விட்டு அங்கிருந்து சென்றிருக்கலாம் என்றனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 9 Jan 2022 8:31 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி