திருச்சி அருகே விபத்து: லாரி டிரைவருக்கு எமனானது லாரி

திருச்சி அருகே விபத்து: லாரி டிரைவருக்கு எமனானது லாரி
X
திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் லாரி டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்சி அருகே உள்ள மணிகண்டத்தை அடுத்த நாகமங்கலம், எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் கண்ணன் (வயது 52). லாரி டிரைவரான இவர் நேற்று நள்ளிரவில் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அம்பேத்கர் நகர் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னால் சென்ற ராட்சத லாரி திடீரென இடதுபுறம் திரும்பியது.

அப்போது மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக லாரியின் பின்புறம் மோதியதில், கண்ணன் சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது பற்றி தகவலறிந்த மணிகண்டம் போலீசார், கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story