/* */

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதை தடுக்கும் வகையில், மாநகர காவல்துறை சார்பில் தனிப்படை அமைக்கப்பட்டு சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காவல்துறையினரும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் காவல்துறையினர் திருச்சி ஜீயபுரம் பகுதியில் நடத்திய சோதனையில், லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட ஜீயபுரம் மற்றும் பெரிய கருப்பூர் பகுதியைச் சேர்ந்த, பரமசிவம்(51), சந்திரசேகர்(49), ராமகிருஷ்ணன்(49),லோகநாதன்(42) உள்ளிட்ட 4 பேரை கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து லாட்டரி சீட்டு விற்பனை செய்த 4,500 ரூபாய், லாட்டரி சீட்டு விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 4 செல்போன்கள் மற்றும் லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து குற்றவாளிகள் மீது ஜீயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Updated On: 7 Jan 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு