/* */

முசிறி அருகே வாலிபர் எரித்துக்கொலை? உடல் பாலத்திற்கு அடியில் வீச்சு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே எரித்துகொலை செய்யப்பட்ட இளைஞர் உடல் பாலத்திற்கு அடியில் வீசப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

முசிறி அருகே வாலிபர் எரித்துக்கொலை? உடல் பாலத்திற்கு அடியில் வீச்சு
X

முசிறி அருகே தேவரப்பம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு துறையூர்-நாமக்கல் சாலையில் தேவரப்பம்பட்டி பகுதியில் காட்டாற்று பாலம் ஒன்று உள்ளது. இதன் அடியில் வாலிபர் சடலம் ஒன்று கருகிய நிலையில்கிடப்பதாக ஜெம்புநாதபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

பாதி எரிந்த நிலையில் சடலமாக கிடந்தவருக்கு சுமார் 20 வயதிலிருந்து 25 வயது இருக்கும். அவரை வெளியே கொலைசெய்து சடலத்தை சம்பவ இடத்தில் கொண்டு வந்துமர்ம நபர்கள் போட்டு சென்றதும், முதல் கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் வாலிபரின்அடையாளத்தை மறைப்பதற்காக கொலையாளிகள் டீசல் ஊற்றி சடலத்தை எரிக்க முயற்சி செய்துள்ளனர். வாலிபர் யார்?அவரை கொலை செய்துவீசி சென்ற நபர்கள் யார்?கொலைக்கான காரணம்என்ன? என்று பல்வேறுகோணங்களில் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

இந்தகொலையில் துப்பு துலக்குவதற்காக சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் ஸ்பார்க் வரைவழைக்கப்பட்டது. கைரேகை தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர்அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.மேலும் வாலிபர் கொலை செய்யப்பட்டு சடலம் வீசப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 16 Nov 2021 9:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  2. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  3. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  4. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  5. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  6. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  9. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  10. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...