Begin typing your search above and press return to search.
முசிறியில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் நேரு பங்கேற்பு
திருச்சி மாவட்டம் முசிறியில் நடந்த சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அமைச்சர் நேரு பங்கேற்று மனுக்களை வாங்கினார்.
HIGHLIGHTS
தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி திருச்சி மாவட்டம் முசிறியில் இன்று சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன், கதிரவன், முசிறி வருவாய் கோட்டாட்சியர் மாதவன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்கள் மாலா ரவிச்சந்திரன், ஷர்மிளா பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர்.