திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயற்சி

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயற்சி
X

தொட்டியத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயிற்சி நடந்தது.

திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு புத்தாக்க பயற்சி அளிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் மக்கள் பிரதிநிதிகளுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தொட்டியம் ஒன்றிய குழுத்தலைவர் புனிதா ராணி மகேஸ்வரன் தலைமை தாங்கினார்.

முகாமில் தொட்டியம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி வசந்தி, வட்டார ஒருங்கிணைப்பாளர் ராதிகா, வட்டார மேற்பார்வையாளர் வளர்பிறை செல்வி ஆகியோர் அரசு செயல்படுத்தி வரும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்கள் பற்றி பேசினார்கள்.

முகாமில் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சிகளில் இருந்து ஊராட்சி மன்ற தலைவர்கள், மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
the future of ai in healthcare