/* */

முசிறி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி-5 பேர் காயம்

முசிறி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலியானார். 5 பேர் காயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

முசிறி அருகே லாரி கவிழ்ந்து ஒருவர் பலி-5 பேர் காயம்
X
முசிறி அருகே செங்கல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலியானார்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கருப்பு கோயில் கொட்டம் என்ற இடத்தில் அய்யம்பாளையத்தில் இருந்து தண்டலைக்கு செங்கல் ஏற்றி சென்ற லாரி வளைவில் திரும்பும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பெரமூரை சேர்ந்த சுதாகர், ராஜாத்தி, வீரமணிபட்டியைச் சேர்ந்த சந்திரா, நாச்சம்பட்டியை சேர்ந்த மலர்கொடி என்கிற மலர் வேளகாநத்தத்தை சேர்ந்த லட்சுமணன் ஆகியோர் படுகாயமடைந்து முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சுதாகர், ராஜாத்தி, சந்திரா, மலர்கொடி, ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் அய்யம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது47) என்பவர் படுகாயமடைந்து இறந்துவிட்டார் . இந்த விபத்து குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் துரைராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.

Updated On: 19 Sep 2021 8:40 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்