Begin typing your search above and press return to search.
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கிணற்றில் தவறி விழுந்த சிறுமி பலி
திருச்சி மாவட்டம் முசிறி அருகே கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலியானார்.
HIGHLIGHTS
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள வெள்ளூர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரின் மகள் ராகவி (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் பள்ளி மாணவி தவறி விழுந்தார். இதில் நீரில் மூழ்கி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த தகவலின் பேரில் முசிறி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று ராகவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.