/* */

முசிறியில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சமையல் மாஸ்டர் கைது

முசிறியில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சமையல் மாஸ்டரை போக்சா சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

முசிறியில் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்த சமையல் மாஸ்டர் கைது
X

முசிறி பெரியார் நகரில் வசித்து வருபவர் சிங்காரவேலன் (51). சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இதே பகுதியில் வசிக்கும் விதவைப் பெண் ஒருவர் கடந்த 24.3.2021அன்று முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

அதில் பெரியார் நகரில் வசித்து வரும் சமையல் மாஸ்டர் சிங்காரவேலன் தனதுவீட்டில் யாரும் இல்லாத பொழுது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார். கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த 7 வயது பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று பாலியல் சீண்டல் செய்து எனது மகளை துன்புறுத்தல் செய்துள்ளார்.

எனவே சிங்காரவேலன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த புகார் மனுவில் கூறியிருந்தார். இதையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முசிறி குளித்தலை இணைக்கும் தந்தை பெரியார் பாலத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வந்த சிங்காரவேலனை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் முசிறி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி பாலியல் சீண்டல் போக்சோ வழக்கில் சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் முசிறியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 23 April 2021 9:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  3. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  4. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  5. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  6. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  7. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...
  8. வீடியோ
    பொண்ண பணத்துக்காக ஏமாத்தி சீரழிச்சான் | Perarasu கிளப்பிய சர்ச்சை...
  9. க்ரைம்
    ஜெயக்குமார் கொலையா? தற்கொலையா? தென்மண்டல போலீஸ் ஐஜி பரபரப்பு பேட்டி
  10. க்ரைம்
    வீடு புகுந்து பெண்ணிடம் ஆபாசமாக பேசியவர் குண்டர் சட்டத்தில் கைது