/* */

திருச்சி அருகே கூட்டுறவு ஆய்வாளரை தாக்கியதாக போலீசில் புகார்

வேறொரு பெண்ணுடன் பேசிய கூட்டுறவு ஆய்வாளரை தாக்கிய மனைவி குடும்பத்தினர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருச்சி அருகே  கூட்டுறவு ஆய்வாளரை தாக்கியதாக போலீசில் புகார்
X

திருச்சி மாவட்டம் தொட்டியம் பகுதியில் கூட்டுறவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ஜீவானந்தம் (வயது 34). இவருக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் பவானிதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து முடிந்தது. இதையடுத்து சில நாட்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 1 வருடமாக 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜீவானந்தம் அவருடைய தூரத்து உறவினரான எமல்டாமேரி என்ற பெண்ணை தன்னுடைய வீட்டில் அழைத்து பேசியுள்ளார். இது பவானிதேவிக்கு தெரியவந்ததையடுத்து அவருடைய உறவினர்கள், பெற்றோர், உடன்பிறந்தவர்கள் என மொத்தம் 8-க்கும் மேற்பட்டோர் ஜீவானந்தத்தின் வீட்டிற்கு சென்று எமல்டாமேரி, ஜீவானந்தம் ஆகிய இருவரையம் சரமாரியாக தாக்கியுள்ளனர். இது குறித்து ஜீவானந்தம் தொட்டியம் போலீஸ் ஸ்டேசனில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 11 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  2. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  5. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  6. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  7. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  8. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  9. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...
  10. பட்டுக்கோட்டை
    காலநிலை அறிந்த பயிர் பாதுகாப்பு : விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தல்..!