/* */

முசிறியில் வாகன விபத்து: முன்னாள் ராணுவ வீரர் பலி

முசிறியில் நடந்த வாகன விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார்.

HIGHLIGHTS

முசிறியில் வாகன விபத்து: முன்னாள் ராணுவ வீரர் பலி
X

திருச்சி மாவட்டம், முசிறி திருமுருகன் நகர் பகுதியில் வசித்து வந்தவர் வேலாயுதம் (80), முன்னாள் ராணுவ வீரர். இவர் தனது ஸ்கூட்டரில் முசிறியில் தனியார் பள்ளி வேகத்தடை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த கனரக லாரி மோதியது.

இந்த விபத்தில் முதியவர் வேலாயுதம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து முசிறி போலீசார் விரைந்து சென்று வேலாயுதம் உடலை உடற்கூறு பரிசோதனைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக கனரக லாரி டிரைவர் மூர்த்தி (37) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 23 April 2021 8:52 AM GMT

Related News