/* */

வையம்பட்டி அருகே திருமண நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

வையம்பட்டி அருகே திருமண நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை

HIGHLIGHTS

வையம்பட்டி அருகே திருமண நாளில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
X

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகேயுள்ள சீத்தப்பட்டியை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 22), பெயிண்டர். இவரது மனைவி திவ்யஜெரீனா (21).திருமணம் முடிந்து சில ஆண்டுகள் ஆகிறது. இரண்டரை வயதில் ஒரு மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளது. நேற்று ராபர்ட் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டார்.

அவரது மனைவி திவ்ய ஜெரீனா வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வந்ததையடுத்து வேலைக்கு சென்ற ராபர்ட் உடனடியாக வீடு திரும்பினார். தகவலறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று திவ்ய ஜெரீனாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் ஆர்.டி.ஓ. சிந்துஜா விசாரணை நடத்தினார். திருமண நாளான நேற்று திவ்யஜெரீனா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 15 Dec 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  9. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  10. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!