திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

சொத்து குவிப்பு வழக்கில் திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
திருச்சி தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
X

முன்னாள் அமைச்சர் புலவர் செங்குட்டுவன்.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு வழக்கில் தி.மு.க. முன்னாள் அமைச்சர் குடும்பத்தினருக்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வேலக்குறிச்சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் புலவர் செங்குட்டுவான். இவர் கடந்த 1996 முதல் 2001 வரை கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக இருந்தார்.

அமைச்சர் ஆகப் பதவி ஏற்பதற்கு முன்னர் அவருடைய சொத்து மதிப்பு 3 லட்சத்து 68 ஆயிரத்து 219 .அமைச்சர் பதவியில் இருந்து அவர் இறங்கிய பின்னர் சொத்து மதிப்பு ஒரு கோடியே ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 971 ஆக இருந்தது .

புலவர் அமைச்சராக இருந்ததால் அரசு ஊழியராக கருதப்பட்டு அவர் தனது பதவி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக 81 லட்சத்து 42 ஆயிரத்து 977 ரூபாய் சொத்துக்களை தனது மகன்கள் மற்றும் மகள்கள் பெயரில் குவித்ததாக திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் திருச்சி முதன்மை செசன்சு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் 101 சாட்சிகள் மற்றும் 254 சான்றாவணங்கள் சேர்க்கப்பட்டு இருந்தன. வழக்கை விசாரித்த நீதிபதி கே .பாபு இன்று தீர்ப்பளித்தார். அதில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்காக புலவர் செங்குட்டுவன் அவருடைய மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி, தம்பி மகள் வள்ளி, மருமகன் ராஜலிங்கம் ஆகியோருக்கு தலா3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் தலா 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

புலவர் செங்குட்டுவன் ,அவரது மருமகன் ராஜலிங்கமும் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டதால் அவர்கள் இருவருக்கும் இந்த தண்டனை பொருந்தாது என தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ். ஹேமந்த் ஆஜராகி வாதாடினார்.

Updated On: 6 Oct 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட வருகிறார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
  2. சினிமா
    சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா பத்திரமாக மீட்பு
  3. தமிழ்நாடு
    வெள்ள நிவாரண பணிகளை தீவிரப்படுத்த கூடுதல் அமைச்சர்கள்
  4. சோழவந்தான்
    சோழவந்தான் பகுதிகளில் ஜெயலலிதா நினைவு தினம்: அதிமுவினர் அஞ்சலி
  5. குமாரபாளையம்
    பிளஸ் டூ மாணவர்களே! உங்கள் வாய்ப்புக்கு முந்துங்கள்...!
  6. ஈரோடு
    விஜயமங்கலம் சோதனைச்சாவடி அருகே புகையிலை பொருட்களை கடத்திய 2 பேர் கைது
  7. வணிகம்
    Business News In Tamil 2030-ல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய ...
  8. திண்டுக்கல்
    நத்தம் மின்வாரிய அலுவலக வாசலில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
  9. தமிழ்நாடு
    மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: அமைச்சர் அறிவிப்பு
  10. சினிமா
    Thalapathy 68 Songs மொத்தம் எத்தனை தெரியுமா?