மணப்பாறை அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

மணப்பாறை அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

பைல் படம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அடைக்கம்பட்டியை சேர்ந்தவர் ரேவதி (வயது 28). நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு பிரசவ வலி ஏற்படவே துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ரேவதி 108 ஆம்புலன்ஸ் மூலம் துவரங்குறிச்சியில் இருந்து மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார். புத்தாநத்தம் அருகே சென்ற போது, வலி அதிகரிக்கவே சில நிமிடங்களில் ரேவதிக்கு ஓடும் ஆம்புலன்சிலேயே ஆண் குழந்தை பிறந்தது. ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நிபுணர் மணிமேகலை ரேவதிக்கு பிரசவம் பார்த்து அழகான ஆண் குழந்தையை எடுத்தார். ஓட்டுனராக முருகேசன் இருந்தார். இதையடுத்து தாய் சேய் இருவரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் நலமாக உள்ளனர்.

Tags

Next Story