/* */

திருச்சி அருகே கார்-லாரி மோதி விபத்து: ஒருவர் பலி -7 பேர் படுகாயம்

திருச்சி அருகே காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்; 7 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

திருச்சி அருகே கார்-லாரி மோதி விபத்து:  ஒருவர் பலி -7 பேர் படுகாயம்
X

மதுரையில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே செவந்தம்பட்டி விளக்கு என்ற இடத்தில், விபத்துக்குள்ளானது. அந்த காரின் முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை, அதன் டிரைவர் திடீரென சடன் பிரேக் போட்டுள்ளார்.

இதனால், பின்னால் தொடர்ந்து வந்து கொண்டிருந்த கார், எதிர்பாராத விதமாக லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பேரை, உடனடியாக மீட்டு அருகே மணப்பாறையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இதில், மதுரை இஸ்மான்புரத்தை சேர்ந்த காமின்பாஷா (வயது 51) என்பவர் உயிரிழந்தார். மற்ற 7 பேருக்கும் சிகிச்சை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Updated On: 8 Oct 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...